Saturday, October 3, 2009

இதுநாள் வரை பூணூலை அறுத்தெறிந்து நடுநிலை வேடமிட்டு வந்த கமல், தானும் ஒரு தேசிய வியாதி வேடமிடும் அக்மார்க் பார்ப்பான் தான் என்பதை அப்பட்டமாக நிரூபித்து விட்டான்.

மருத நாயகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகள் வெளிவர இருக்கும் இடையூறுகள், தங்களிடையே அடித்துக் கொள்வதிலேயே மும்முரம் காட்டும் இஸ்லாமிய சமூகத்தின் மீது சேறு வாரி அடிக்கும் இது போன்ற கற்பனைகள் வெளி வருவதற்கு இருப்பதில்லை.

இதற்கு காரணம், முழுக்க முழுக்க இந்தச் சமுதாயமே!

"அறிந்தோ அறியாமலோ ஒரு திலகவதி கூறிய கருத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு வீதிக்கு இறங்கிய சமுதாய இயக்கங்கள், இது போன்ற பார்ப்பன அயோக்கியர்களின் உள்மன வக்கிரங்கள் வெளியாகும் போது மட்டும் சொந்தச் சகோதரனின் முதுகு அழுக்கைச் சுரண்ட ஒளிந்தோடி விடுகின்றன."

"தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம் தான் பதிலாம்!"

அவ்வாறெனில், பாப்பான் கமலின் பார்வையில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத்துக்குப் பதிலடியாகத் தானே கோவையில் அந்த மூன்று முஸ்லிம்களும் தீவிரவாதம் செய்தனர்? எனில், அவர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இஸ்லாமிய சமூகத்தின் மீது சேறு வாரி அடிக்க வேண்டும் எனில், லாஜிக்காவது மண்ணாங்கட்டியாவது!

இன்று ஒரு கமல்! நாளை இவனைத் தொடர்ந்து ஒவ்வொருவனாக இதே மெத்தடைப் பயன்படுத்திப் பாக்கட் நிறைக்க ஆரம்பிப்பான். அதற்கான விதையே இப்போது தூவப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்திலேயே சாவு மணி அடிக்கப்படவில்லையேல், ஏற்கெனவே தீவிரவாதப் பட்டம் சூட்டப்பட்டு குற்றவாளி கூண்டில் தலை குனிந்து நிற்கும் இந்த முஸ்லிம் சமுதாயம் நாளை நேரடியாக தூக்குக் கயிற்றில் எவ்வித கேள்வியும் இன்றி ஏற்றப்படலாம்.

"வரலாற்று உண்மையான மருத நாயகத்தை வெளியிறக்குவதில் கமலுக்கு இருக்கும் தொடை நடுங்கித்தனம், முஸ்லிம் சமுதாயத்தின் மீது கரிவாரி பூசுவதில் இல்லாமல் போனதற்கு இந்த முஸ்லிம் சமுதாயத்தின் விழிப்புணர்வின்மையே காரணம்."

இது போன்ற பொய்கள் காசாக்கப்படும் போது, உப்பு சப்பில்லா மேட்டருக்கெல்லாம் கொடி பிடிக்கும் சமுதாய இயக்கங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.

முளையிலேயே கிள்ளவில்லையேல், வேர் விட்டப்பின் வெட்டி முறிக்க மிகவும் பாடுபட வேண்டியிருக்கும்.

பொய்கள் பரப்பப்படும் போது குறைந்தபட்சம் எதிர்ப்பு குரல் மட்டுமாவது இச்சமுதாயத்திலிருந்து ஒலிக்க வேண்டும். அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையும் கூட!

அதுசரி, பூணூல் அறுத்தெறிந்த நடுநிலையாளர் கமல் அவர்களே,

"மாலேகானில் தாங்களே குண்டு வைத்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்தது போன்ற செட்டப்பைச் செய்த சாமியாரிணி ப்ரக்யா சிங் தலைமையிலான தீவிரவாதக் கூட்டத்தைத் தீவிரவாதம் மூலம் குண்டு வைத்துக் கொல்வது போன்று எப்போது படம் எடுக்கப் போகிறீர்கள்?"

எடுத்துப் பாருங்கள், அப்போது தெரியும் உங்கள் டவுசர், "டவுசர்களால்" படும்பாட்டை!

- அபூ சுமையா.
2009/10/1 Feroz Khan <fiverose@gmail.com>
தமிழக அரசு
கமலஹாசன் நடித்து உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் தடை செய்ய வேண்டும் ..
.
சிறுபான்மை உதவி அறக்கட்டளை துனைத் தலைவர்.
அபுதாஹிர் தமிழக அரசுக்கு கடிதம்..
.
கோவை 30
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்து சக்ரி டோலாட்டி இயக்கிய உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படம் 18.09.2009 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அதன் விமர்சனங்களை பத்திரிக்கைகளில் பார்த்த போது 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக மையக்கருத்துடன் கூடிய திரைப்படமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தபோது 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் மூன்று பேரையும், மற்ற ஒருவரையும், கமலஹாசன் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியைப் போல் நடித்து தமிழக அரசின் காவல்துறை ஐ.ஜி.யிடம், தகவல் தொழில்நுட்ப தொடர்பு மூலம், சென்னை நகரத்தில் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டி கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுவிக்கக் கோரியும்,
அதன் படி மேற்கூறிய நான்கு பேரையும் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வந்து, ஒரு வாகனத்தில் தப்பித்து செல்லும் போது அந்த வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததினால் மூன்று பேர் இறந்ததாகவும், மற்ற ஒருவர் போலி மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் செய்தியாக தீவிரவாதத்திற்கு பதில் தீவிரவாதம் தான் என்பதைப் போலும், அதை ஒரு காவல்துறை அதிகாரியே அங்கீகரித்தது போல் கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பந்தமாக திரைப்படம் பற்றியோ, அதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியோ கூறுவதால் எங்களுக்கு ஆட்சேபணையில்ரலை.ஆனால், 1998 ஆம் ஆண்டின் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிபதிகள் பிரபா 'தேவன், சத்தியநாராயணன் பெஞ்ச் முன்பாக வழக்கறிஞர்கள், மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
நிலுவையிலுள்ள ஒரு பெரும் வழக்கு சம்பந்தமாக அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் மீதும், குறிப்பாக பல அப்பாவி இளைஞர்கள் இந்த வழக்கில் ஜோடிக்கப்பட்டு, அதைப்பற்றிய சாட்சியங்கள் சம்பந்தமான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் தலைமையில் வழக்கறிஞர்களின் குழு தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் முன்பும் ஒரு தவறான கருத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாகும்.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் ஊடகங்களின் விசாரணை பற்றி கருத்து கூறிய நிலையில் கவனிக்கத் தக்கது.
மேலும், 2006ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில், 1998 குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு பிறகு வழக்கறிஞர்களின் வாதுரை நடந்து கொண்டிருந்த போது கோவை மாநகர உளவுத்துறை அதிகாரி ரத்தினசபாபதி, அவருக்கு பணிபுரியும் பால்ராஜ், இளங்கோ ஆகியோர் சதி செய்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது வெடிகுண்டு வழக்கு ஒன்று புனைந்து போத்தனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்து அதனை ஊடகங்களின் மூலமாக விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்தின் கண்ணோட்டத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினர்.
ஆனால், பின்னோக்கி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குழு தீர விசாரித்து ரத்தினசபாபதி மற்றும் அதன் அதிகாரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கினை ஜோடித்துள்ளனர் என்று ஆதாரத்துடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து இளைஞர்களை விடுவித்தனர்.
ஆனால், இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் மேற்படி வழக்கு ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஒரு பீதியையும், நீதிமன்றத்தின் கருத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது உண்மை.
1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிணை கூட கிடைக்காமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்கள் பலபேருக்கு மேல் முறையீட்டிலாவது நீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமான கைதிகளை விடுவிக்கக் கோரி மையக் கருத்தாக கொண்டு திரையிட்டு இருப்பது நிலுவையிலிருக்கும் மேல் முறையீட்டு விசாரணை பாதிக்கப்படுவதாக உறுதியாக நம்புகிறோம்.
எனவே, தாங்கள் உடனடியாக உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிட்டுள்ளதை மேல் முறையீடு வழக்கு முடியும் வரை நிறுத்திவைக்க உத்தரவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
1. தமிழக உள்துறைச் செயலாளர் அவர்கள்தலைமைச் செயலகம்சென்னை
2. தலைவர் thanikkaiகுழு
3. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் டீல – கமலஹாசன் சென்னை
இப்படிக்குயு.அபுதாகீர்துணைத் தலைவர்சிறுபான்மை உதவி அறக்கட்டளை

Friday, October 2, 2009

சோழபுரம் இஃப்தார் நிகழ்ச்சி


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, September 17, 2009, 15:29
இதர நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.